Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Monday, April 7, 2008

Poem

எண்ணம் விளங்கா வடிவமாய், எனக்கே புரியா உருவமாய் திகழும் என் பாடல்
எங்கு போய்ச் சொல்ல...என் கவிதைகள் எனக்கே புரியவில்லை...
ஆணவம் இல்லை என் குரலில்..அழுகை தான் அதிகம்.
குழந்தையை பெற்றும் அடையாளம் காணாத தாய் போல நெஞ்சில் பரவும் சோகம்
இதை எண்ணி எழுதினேனா அதை நினைத்து விளக்கினேனா..
எதில் மயங்கி இதை படைத்தேன்..கனவில் எங்கே இதை விதைத்தேன்...எனப் புரியா கேள்விகள்
விடை அறியா கேள்விகள் ஏராளம்..
என் கேள்விக்கு விடை பலரிடம் இருக்கலாம்..ஆனால் என்னால் தான் கேட்டு கொள்ள முடியவில்லை..
எனக்கு உண்மைப்புரியலில் காதல் அதிகம்..தெரிந்து தெளிதலில் வேகம் அதிகம்

Sunday, March 30, 2008

தினக்குறிப்பு

இன்னாளை வீணாக்கும் எண்ணம்
மனதிற்கு தீர்வு செய்யாமல் பொழுது விடிந்தது
ஆதவன் என்மேல் படிந்தான்..
நானும் உரங்கிய மனதுடன் எழுந்தேன்..
காலை பொழுது கனவுடன் கழிந்த்தது..
மதியம் பேச்சால்..
மாலை சண்டையும் சச்சரவும்..
இரவு குழப்பமாக...
---நான் வளர்வேன்..

பிறப்பு

இந்திரன் யோசித்தான்...பிரும்மனுக்கு தூது அனுப்பினான்
தேவர்கள் ஆலோசனைக் கூட்டம்..
பரமசிவன் தலை கங்கை கூட சலசலத்தது..
தேவ கன்னிகைகள் பேச்சு வார்த்தை..
விஷ்னு உபதேசம் சொன்னார்..
யாரை அனுப்பலாம்?-- கடுமையான போட்டி..
இறுதியில் முடிவெடுத்தனர்..சிரித்தனர்..
அனுப்பினர் என்னை பூமிக்கு.